Friday, March 18, 2011

சூப்பர் ஸ்டாரால் கூட முடியாது.....

சூப்பர் ஸ்டாரால் கூட முடியாது..அப்புக்குட்டியை பாராட்டிய இசைஞானி
அழகர்சாமியின் குதிரை பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இளையராஜா, அப்படத்தின் பிரஸ்மீட்டிற்கும் வந்திருந்து அனைவருக்கும் இன்ப 
அதிர்ச்சி கொடுத்தார். 
இந்த படத்தின் சில ரீல்களுக்கு பின்னணி இசையமைத்துவிட்டு நேராக அங்கு வந்த ராஜா உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்தார். உங்க செல்போன்களை அணைச்சு வச்சுட்டு இந்த படத்தின் பின்னணி இசையை கொஞ்சம் கேளுங்க. நீங்க ஒரு சொட்டு கண்ணீர் விடலைன்னா நான் இசையமைக்கிறதையே நிறுத்திடுறேன் என்றார் மிக தீர்க்கமாக!

அப்புறம் அவர் பேசியதெல்லாம் தத்துவம் நம்பர் ஆயிரமாயிரம்! மனுஷனோட எண்ணம்தான் இந்த மண்ணுல விதைக்கப்படுது. இன்னைக்கு ஜப்பான்ல இப்படி ஆகியிருக்குன்னா அதுக்கு காரணம் நம்ம எண்ணம்தான். அது து£ய்மையா இருக்கணும். கடவுள் நம்ம மீது கோபப்பட வேண்டாம். ஒரு பெருமூச்சு விட்டால் போதும். நாமெல்லாம் இல்லை. அதை புரிந்து கொள்ள வேண்டும் என்றவர், சட்டென்று படத்தை பற்றி பேச ஆரம்பித்தார்.
அப்புக்குட்டி இந்த படத்தில் அற்புதமா நடிச்சிருக்கார். அதுக்காக அவர் தன்னை சூப்பர் ஸ்டார்னு நினைச்சுக்க கூடாது. நீ நினைச்சாலும் சூப்பர் ஸ்டாரா ஆக முடியாது. அதே மாதிரி இந்த படத்தில் அப்புக்குட்டி நடிச்சிருக்கிற கேரக்டர்ல அந்த சூப்பர் ஸ்டாரால் கூட நடிக்க முடியாது. இதை புரிஞ்சுக்கணும். கதை சொல்ல வர்ற இயக்குனர்கள்தான் முதலாளி. பல வருஷமா போராடி தன்னுடைய அனுபவங்களையெல்லாம் கதையா வடிச்சு கொண்டு வர்றவங்க அவங்க. அவங்ககிட்ட போய், என் இமேஜூக்கு இந்த கேரக்டர் சரியா வருமான்னு கேட்க கூடாது என்று ராஜா பேச பேச இப்படியெல்லாம் அவர் பேசியதில்லையே என்ற அதிர்ந்து போய் கேட்டுக் கொண்டிருந்தார்கள் நிருபர்கள்.

No comments:

Post a Comment