சோமாலியா கடற்கொள்ளையர்களின் கப்பல் ஒன்றை வழிமறித்து சிறைபிடித்த இந்திய கடற்படையினர், அதில் பிணைக் கைதிகளாக சிறை வைக்கப்பட்டிருந்த 13 சிப்பந்திகளை மீட்டுள்ளனர்.அத்துடன் சோமாலியா கடற்கொள்ளையர்கள் 61 பேரையும், இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.மேற்கு கடலோரப் பகுதியிலிருந்து 600 கடல் மைல் தொலைவில், இந்திய கடற்படையினர் இந்நடவடிக்கையை மேற்கொண்டனர்.பிடிபட்டுள்ள சோமாலிய கொள்ளையர்களின் கப்பல், கொள்ளையர்களின் தாய் கப்பல் என்று கூறப்படுகிறது.பிடிபட்ட இந்த கப்பல் மும்பை கொண்டு வரப்படுவதாகவும், இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment