Friday, April 8, 2011

உலகக்கோப்பையும் தமிழக அரசியலும் (போட்டோ கமெண்ட்ஸ்)


அனல் தெறிக்கும் இத்தேர்தல் நேரத்தில், நான் கண்ட சில புகைப்படங்களும்,எனது கற்பனையும் ..........
தமிழக அரசியல்வாதிகள் இப்படியும் பேசுவார்கள்......நம்பமுடியாது.....
ஏனென்றால் நாம் எல்லோரும் இளிச்சவாயர்கள் தானே..(என்று அவர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள்)







இதில் ஒரு காமெடி என்னன்னா.....இன்னும் இந்த முன்னாள் நடிகை, தி.மு.க. கடந்த ஐந்து ஆண்டுகள் வெற்றி கரமாக ஊழலும் செய்து ஆட்சி நடத்தி,அடுத்த தேர்தல் வந்த பின்னும் "மைனாரிட்டி தி.மு.க.அரசு ", "மைனாரிட்டி தி.மு.க.அரசு" என்று ஒப்பாரி வைப்பது....நம்மால் இந்த மாதிரி ஊழல் செய்ய முடிய வில்லையே என்ற வயித்தெரிச்சலில் புலம்புவது....எல்லாம் ஒரே சாக்கடையில் உருளும் ஜந்துக்கள் தானே....என்ன சொல்றீங்க....












Tuesday, April 5, 2011

ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்துள்ளார் வடிவேலு : ஆர்.வி.உதயக்குமார்


நாகர்கோவிலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஆர்.வி.உதயக்குமார் பிரசாரம் மேற்கொண்டு பேசினார். நாகர்கோவில் தொகுதி அதிமுக வேட்பாளர் நாஞ்சில் முருகேசனை ஆதரித்து பார்வதிபுரத்தில் அவர் பேசியதாவது: விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர். எதையும் ஓப்பனாக பேசுவார். 

அவரை வைத்து நான் சின்னக்கவுண்டர் படம் இயக்கும்போது நடிக்க வாய்ப்பு கேட்டு வந்தவர்தான் வடிவேலு. அந்த படத்தில் விஜயகாந்துக்கு குடை பிடிப்பவராக வடிவேலு நடித்திருப்பார்.விஜயகாந்திடம், பாவம் உங்கள் ஊர் பையன்தான் அண்ணே என்று, நான்தான் அறிமுகம் செய்து வைத்தேன். விஜயகாந்த் அவரை தட்டிக்கொடுத்து வளர்த்து விட்டார்.

ஆனால் ஏற்றிவிட்ட ஏணியை வடிவேலு எட்டி உதைத்துள்ளார். தி.மு.க.வுக்கு ஆதரவாக பேசும் அவர் வேட்பாளரை மதிப்பதே கிடையாது.திரை உலகம் இன்று ஒரே குடும்பத்தை நம்பி உள்ளது. இவர்களுக்கு ஜெயலலிதா மட்டும்தான் விடுதலை வாங்கித்தர முடியும் என்றார் உதயக்குமார்.

Friday, March 18, 2011

சூப்பர் ஸ்டாரால் கூட முடியாது.....

சூப்பர் ஸ்டாரால் கூட முடியாது..அப்புக்குட்டியை பாராட்டிய இசைஞானி
அழகர்சாமியின் குதிரை பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இளையராஜா, அப்படத்தின் பிரஸ்மீட்டிற்கும் வந்திருந்து அனைவருக்கும் இன்ப 
அதிர்ச்சி கொடுத்தார். 
இந்த படத்தின் சில ரீல்களுக்கு பின்னணி இசையமைத்துவிட்டு நேராக அங்கு வந்த ராஜா உணர்ச்சி கொந்தளிப்பில் இருந்தார். உங்க செல்போன்களை அணைச்சு வச்சுட்டு இந்த படத்தின் பின்னணி இசையை கொஞ்சம் கேளுங்க. நீங்க ஒரு சொட்டு கண்ணீர் விடலைன்னா நான் இசையமைக்கிறதையே நிறுத்திடுறேன் என்றார் மிக தீர்க்கமாக!

அப்புறம் அவர் பேசியதெல்லாம் தத்துவம் நம்பர் ஆயிரமாயிரம்! மனுஷனோட எண்ணம்தான் இந்த மண்ணுல விதைக்கப்படுது. இன்னைக்கு ஜப்பான்ல இப்படி ஆகியிருக்குன்னா அதுக்கு காரணம் நம்ம எண்ணம்தான். அது து£ய்மையா இருக்கணும். கடவுள் நம்ம மீது கோபப்பட வேண்டாம். ஒரு பெருமூச்சு விட்டால் போதும். நாமெல்லாம் இல்லை. அதை புரிந்து கொள்ள வேண்டும் என்றவர், சட்டென்று படத்தை பற்றி பேச ஆரம்பித்தார்.
அப்புக்குட்டி இந்த படத்தில் அற்புதமா நடிச்சிருக்கார். அதுக்காக அவர் தன்னை சூப்பர் ஸ்டார்னு நினைச்சுக்க கூடாது. நீ நினைச்சாலும் சூப்பர் ஸ்டாரா ஆக முடியாது. அதே மாதிரி இந்த படத்தில் அப்புக்குட்டி நடிச்சிருக்கிற கேரக்டர்ல அந்த சூப்பர் ஸ்டாரால் கூட நடிக்க முடியாது. இதை புரிஞ்சுக்கணும். கதை சொல்ல வர்ற இயக்குனர்கள்தான் முதலாளி. பல வருஷமா போராடி தன்னுடைய அனுபவங்களையெல்லாம் கதையா வடிச்சு கொண்டு வர்றவங்க அவங்க. அவங்ககிட்ட போய், என் இமேஜூக்கு இந்த கேரக்டர் சரியா வருமான்னு கேட்க கூடாது என்று ராஜா பேச பேச இப்படியெல்லாம் அவர் பேசியதில்லையே என்ற அதிர்ந்து போய் கேட்டுக் கொண்டிருந்தார்கள் நிருபர்கள்.